Tamil News
Home செய்திகள் பூரண குணடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார் சீனப் பெண்

பூரண குணடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார் சீனப் பெண்

கொரோனா தொற்றிற்காக சிகிச்சை பெற்று வந்த சீனப் பெண், வைத்தியசாலையிலிருந்து நேற்றுக் காலை வெளியேறினார்.

உலகையே உலுக்கும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட சீனப் பெண்ணொருவர் அடையாளம் காணப்பட்டு, கொழும்பு தேசிய தொற்று நோய்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை முடிந்து அவர் குணமடைந்தபோதிலும், அவரது உடல் நிலை தொடர்ந்து கவனிக்கப்பட்டு, பூரண தேக ஆரோக்கியத்துடன் நேற்றுக் காலை வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார்

Exit mobile version