புர்கா அணியத் தடை – இலங்கை அரசிற்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு

இலங்கை முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதை தடை செய்யும் வகையிலான அமைச்சரவை பத்திரத்தில் தான் கையெழுத்திட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கடந்த 13ம் திகதி களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், இந்த கருத்தை வெளியிட்டிருந்தார்.

இதையடுத்து, புர்கா அணிவதை தடை செய்யும் விவகாரம், சர்வதேச ரீதியில் அதிகளவில் பேசப்பட்டது.

கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் இஸ்லாமியர்களின் ஜனாஸாக்களை (உடல்களை) அடக்கம் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் சுமார் ஒரு வருடமாக மறுப்பு தெரிவித்து வந்து தற்போது அந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் புர்காவிற்கு தடை ஏற்படுத்தப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர அறிவித்ததையிட்டு மீண்டும் எதிர்ப்பு வலுப்பெற்று வருகிறது.

மேலும் புர்கா தடை ஏற்படுத்தப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட கருத்தை அடுத்து, இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த விவகாரத்தில் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் துணைத் தலைவர் ரஸ்மின், பிபிசி தமிழிடம் கருத்து தெரிவிக்கையில்,

புர்கா அணிவது தமது மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஒன்று.   புர்காவிற்கு இலங்கை அரசாங்கம் தடை விதிப்பதை ஒரு இஸ்லாமிய சமூகமாக தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.   இஸ்லாமிய மார்க்கத்தில் முகத்திரை அணிவது தடை செய்யப்பட்ட ஒன்று.

முகத்திரை அணிவது என்பது நபிகள் நாயகத்தின் மனைவிகளுக்கு மாத்திரம் உள்ள சட்டம்.  ரசாங்கம் இவ்வாறான சட்டங்களை கொண்டு வருவதை தாம் ஆதரிக்க முயற்சிக்கும் போது, நாளை மேலும் பல்வேறு விடயங்களுக்கு தடை ஏற்படுத்த வாய்ப்புள்ளது” என்றார்.

இது குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரகுமான், பிபிசி தமிழிடம் கூறுகையில், இந்த ஆடையின் ஊடாக பாதுகாப்பு பிரச்னைகள் தோன்றினால், வேறு விதத்தில் கலந்துரையாடல்களை நடத்தி, அதற்கான தீர்மானத்தை எட்ட வேண்டும்.

இந்த பேச்சுவார்த்தையின் ஊடாக எட்டப்பட்ட முடிவுகள் அல்ல.  , மார்க்கம் ரீதியிலான உரிமைகளை பாதிக்கக்கூடிய முடிவாகவே இது இருக்கின்றது.  அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை தம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும், அரசாங்கத்திற்கு பிரச்சினைகள் ஏற்படுகின்ற போது, அந்த பிரச்னைகளை திசை திருப்புவதற்கு முஸ்லிம்கள் தொடர்பிலான பல விடயங்களை முன்கொண்டுவரப்பட்டது.

இதேவேளை, இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஜெனீவாவில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு அரபு நாடுகளிடமிருந்து ஆதரவை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளையே அரசாங்கம் எடுத்து வருகின்றது” என்றார்.