Tamil News
Home செய்திகள் பீல்ட் மார்ஷல் பதவியை திருப்பி ஒப்படைக்கும் சரத்

பீல்ட் மார்ஷல் பதவியை திருப்பி ஒப்படைக்கும் சரத்

முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தனக்கு வழங்கப்பட்ட பீல்ட் மார்ஷல் பதவியை திருப்பி ஒப்படைக்கவுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவிற்கு அட்மிரல் ஒப் த பீல்ட் பதவியும், முன்னாள் விமானப்படைத் தளபதிக்கு மார்ஸல் ஒப் த எயார்போஸ் பதவியும் வழங்கியிருந்தார்.

இந்த இரு பதவிகளும் தனது பதவிக்கு சமனான பதவி எனவும், இது தனக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்த சரத் பொன்சேகா தனது பதவியை திருப்பி ஒப்படைக்கப் போவதாக அறிவித்துள்ளதாகவும் ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version