Tamil News
Home உலகச் செய்திகள் பிரித்தானிய பிரதமரின் புதிய திட்டங்கள்

பிரித்தானிய பிரதமரின் புதிய திட்டங்கள்

பிரித்தானியாவின் புதிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன், புதிய பிரதமர் என்ற வகையில் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இதன் போது பிரித்தானியாவில் சட்டéர்வ வதிவிட அனுமதியை பெறாமல் தங்கியுள்ள சுமார் ஐந்து இலட்சம் குடியேறிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் சாத்தியங்களை பிரித்தானியாவின் புதிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஈழத்தமிழர்கள் உட்பட பிரித்தானியாவில் சட்டéர்வ வதிவிட அனுமதியில்லாமல் சுமார் ஐந்து லட்சம் குடியேறிகள் நீண்ட காலமாக வாழும் நிலையில் அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதத்தில் அவர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு அளிப்பது குறித்து அவர் கருத்துத் தெரிவித்தார்.

பொறிஸ் ஜோன்சன் லண்டன் நகரின் முதல்வராக இருந்த வேளை பிரித்தானியாவில் சட்டபூர்வ வதிவிட அனுமதியில்லாமல் வாழும் குறியேறிகளுக்கு வதிவிட அனுமதி வழங்கும் பரிந்துரையை முன்வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version