பிரித்தானியாவில் புலனாய்வுத் தகவல்களை சேகரிக்கும் இலங்கை

இலங்கை அரசின் புலனாய்வுத்துறையினர் பிரித்தானியவில் உள்ள புலம்பெயர் தமிழ் மக்களின் நடவடிக்கைகளை மிகவும் தீவிரமாக கண்காணித்து வருவதாக பிரித்தானியாவின் குடிவரவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்ப்பு பேரணிகள், ஒன்றுகூடல்கள் போன்றவற்றையும் மற்றும் சமுகவலைத்தளங்களில் பிரித்தானியா தமிழ் மக்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் இலங்கை அரசு கண்காணித்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.