Tamil News
Home உலகச் செய்திகள் பிரான்ஸில் மீண்டும் பொது முடக்கம் –  எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

பிரான்ஸில் மீண்டும் பொது முடக்கம் –  எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

பிரான்ஸ் நாட்டில் மீண்டும் பொது முடக்கம் அறிவித்துள்ள அதிபரின் முடிவுக்‍கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில்  கொரோனா பரவல் மீண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக சில நாடுகளில் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில்,  பிரான்ஸ்  நாட்டில் கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாவது அலை வேகமெடுத்துள்ளது. அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை நெருங்கி வருகிறது.

மேலும் நாடு முழுவதும் தினமும் 40 ஆயிரத்துக்‍கும் மேற்பட்டோருக்‍கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்படும் நிலையில், உயிரிழப்புக்‍களும் அதிகரித்து வருகின்றன.  எனவே, கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில், பிரான்ஸில் நாடு தழுவிய  ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மெக்ரன் அறிவித்துள்ளார். அதன்படி, அடுத்த மூன்று வாரங்களுக்கு பள்ளிகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இமானுவேல் மெக்ரனின் அறிவிப்பைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிக்‍கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதே போல் பொதுமக்‍கள் தரப்பிலும் அதிபரின் முடிவுக்‍கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

உலகில் 130,909,484 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் 2,852,472 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், பிரான்ஸில் மட்டும், நாக்கு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version