பாகிஸ்தான் காவல் நிலையம் மீது தாக்குதல் – 5 பேர் பலி

பாகிஸ்தானில் காவல்துறை அலுவலகம் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டதுடன், 27 பேர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

நேற்று (30) மாலை கெட்டா பகுதியில் உள்ள காவல் நிலையம் மீது உந்துருளியில் வந்த தற்கொலையாளிகள் தாக்குதல் நடத்தியதாகவும், அது காவல்துறை வாகனத்தை குறிவைத்தே காவல் நிலையத்திற்கு அண்மையில் நிகழ்ந்ததாகவும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் இரு காவல்துறை அதிகாரிகளும் அப்பாவி மக்கள் மூவரும் கொல்லப்பட்;டதுடன். பல காவல்துறை அதிகாரிகள் உட்பட 27 பேர் காயமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளர்.

பாகிஸ்தானில் அண்மைக்காலமாக இவ்வாறான பல தாக்குதல்கள் இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.