Tamil News
Home செய்திகள் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களை அச்சுறுத்தும் அரச படையினர்

பல்கலைக்கழக தமிழ் மாணவர்களை அச்சுறுத்தும் அரச படையினர்

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவரும் ஊடகவியலாளருமான இராசரத்தினம் தர்ஷனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் யாழ் மாவட்டத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து சுமார் 3 மணத்தியாலத்திற்கும் மேலாக விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர்கடந்த 2022 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை யாழ் பல்கலைக்கழகத்தில் முன்னெடுத்தபொழுது தமிழீழ விடுதலைப்புலிகளின் பாடல் இசைக்கபட்டமை மற்றும் மாணவர் ஒன்றிய செயற்பாடுகள் தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இழந்த தம் உறவுகளை நினைவு கூர்ந்து வணங்க ஒவ்வொரு மனிதனிற்கும் உள்ள உரிமை எம் மண்ணில் மாணவ சமூகத்திற்குக் கூட மறுக்கப்படுவதையும் அதைப் பயங்கரவாதச் செயலாகப் பார்க்கப்படுவதையும் வன்மையாகக் கண்டிப்போம்!

Exit mobile version