பருத்தித்துறையில் 11 தொற்றாளர்- பிரபலமான ஓடக்கரை வீதி முடக்கம்!

பருத்தித்துறை ஓடக்கரை வீதியில் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த வீதியின் ஒரு பகுதி முடக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.

ஓடக்கரை வீதியில் முடக்கப்பட்ட பகுதியில் மூன்று குடும்பங்களை சேர்ந்த 11 பேருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கான தொற்று மூலம் எது என்பதை அடையாளம் காணமுடியாத நிலை நீடிப்பதாக பருத்தித்துறை சுகாதார பிரிவு தெரிவித்தது.

மேலும், இவர்களுடன் தொடர்புடையவர்களை இனம் கண்டு அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, அப்பகுதியில் அண்மையில் இடம்பெற்ற மரணச் சடங்கு நிகழ்வுக்கு பலர் வந்து சென்றுள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.