Tamil News
Home செய்திகள் பயங்கரவாதத்தை முறியடிக்க இந்தியா உதவும் – இந்திய வெளியுறவு அமைச்சர்

பயங்கரவாதத்தை முறியடிக்க இந்தியா உதவும் – இந்திய வெளியுறவு அமைச்சர்

சிறிலங்காவில் பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிக்கும் செயற்பாடுகளில் இந்தியா உதவி செய்யும் என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்.

02.08 அன்று பாங்கொக்கில் நடைபெற்ற ஆசியான் வருடாந்த மாநாட்டில் பின்னர் சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பனவை சந்தித்துப் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இச்சந்திப்பின் போது ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முக்கியமாக பேசப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இம்மாநாட்டில் கலந்து கொண்ட சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பன, பங்களாதேஸ், நிêசிலாந்து நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களையும், ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைவர் பிரெட்ரிக்கா மொகரினியையும் சந்தித்து கலந்துரையாடினார்.

Exit mobile version