பதவி விலகிய முஸ்லீம் அமைச்சர்களின் இடங்களுக்கு சிங்கள அமைச்சர்கள் நியமனம்

சிறீலங்க அரசின் பிரதி அமைச்சர் புத்தியா பத்திரன, நாடாளுமன்ற உறுப்பினர்கள் லக்கி ஜெயவர்த்தனா மற்றும் அனோமா கமகே ஆகியோர் சிறீலங்கா அமைச்சரவையின் புதிய அமைச்சர்களாக நியமனம் பெற்றுள்ளனர்.

ஏப்பிரல் இடம்பெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்து பதவி விலகிய முஸ்லீம் அமைச்சர்களின் வெற்றிடங்களே சிங்கள அமைச்சர்களைக் கொண்டு நிரப்பப்பட்டுள்ளது.

இன்று (10) காலை இந்த நியமனங்கள் சிறீலங்கா அரச தலைவர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

புத்தியா பத்திரனா, வர்த்தக மற்றும் தொழில்துறை மீள்குடியமர்வு பிரதி அமைச்சராகவும், லக்கி ஜெயவர்த்தனா நகர திட்டமிடல், குடிநீர் வினியோகம் மற்றும் கல்வித்துறை பிரதி அமைச்சராகவும், அனோமா கமகே நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி எரிபொருள் வளத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.