Tamil News
Home உலகச் செய்திகள் படையினருடன் வந்த உளவு விமானத்தை நாம் தப்பவிட்டுள்ளோம்: ஈரான்

படையினருடன் வந்த உளவு விமானத்தை நாம் தப்பவிட்டுள்ளோம்: ஈரான்

இந்த வாரம் ஈரானிய கடற்பகுதியில் வைத்து அமெரிக்காவின் ஆளில்லாத விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டபோது அமெரிக்கப் படையினருடன் வந்த விமானத்தின் மீது தாக்குதல் நடத்துவதை தவிர்த்ததாக ஈரானின் வான்படை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

அமெரிக்கப் பபடையினருடன் வந்த மற்றுமொரு உளவு விமானம் சுடப்பட்ட விமானத்திற்கு அண்மையக பயணித்தது. ஆனால் எமது விமான எதிர்ப்புப் படையினர் அதனை குறிவைக்கவில்லை.

பி-8 வகையான உளவு விமானமே 35 அமெரிக்கப்படையினருடன் உளவு நடவவடிக்கையில் ஈடுபட்டிருந்தது. அதனைத் தாக்கி அழிக்கும் உரிமை எமக்கு இருந்தது எனினும் தேவையற்ற உயிரிழப்புக்களைத் தவிர்ப்பதற்காக நாம் அதனை தாக்கவில்லை என தெரிவித்துள்ளது.

Exit mobile version