Home செய்திகள் படகில் வந்த வவுனியாவை சோ்ந்த ஐவா் தமிழகத்தில் தஞ்சம்

படகில் வந்த வவுனியாவை சோ்ந்த ஐவா் தமிழகத்தில் தஞ்சம்

IMG 20240207 WA0058 படகில் வந்த வவுனியாவை சோ்ந்த ஐவா் தமிழகத்தில் தஞ்சம்
இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் 3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

வவுனியாவைச் சேர்ந்த நந்தகுமார், அவரது மனைவி நித்யா மற்றும் அவரது 3 குழந்தைகள் நேற்று மாலை மன்னாரில் இருந்து ஒன்றரை இலட்சம் ரூபா கொடுத்து பைப்பர் படகில் புறப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று அதிகாலை இராமேஸ்வரம் அடுத்துள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை முதலாம் மணல் திட்டில் கடற்கரையில் இறங்கியுள்ளனர்.

தகவல் அறிந்த இராமேஸ்வரம் மரைன் பொலிஸார், இலங்கைத் தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்குப் பின்னர் 5 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

Exit mobile version