Tamil News
Home செய்திகள் நேற்று கொழும்பில் தரையிறங்கிய சீன விமானம்; இலங்கைக்கு மீண்டும் மருத்துவ உதவி

நேற்று கொழும்பில் தரையிறங்கிய சீன விமானம்; இலங்கைக்கு மீண்டும் மருத்துவ உதவி

சீனாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒருதொகுதி மருத்துவ உதவிப்பொருட்கள் நேற்று (17) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சீன தூதரக தகவல்களின்படி,COVID-19 தொடர்பிலான 20,000 சோதனை கருவிகள், 10,000 என் -95 முகமூடிகள், 100,000 அறுவை சிகிச்சை முகமூடிகள், 10,000 பாதுகாப்பு உடைகள், 1,000 கண்ணாடிகள் மற்றும் 50,000 அறுவை சிகிச்சை கையுறைகள் என்பன இந்த உதவித் தொகுதியில் அடங்கும் என அறியமுடிகிறது.

இதற்கு முன்னரும் சீனா இவ்வகையான உதவிகளை இலங்கைக்கு வழங்கியிருந்த்து குறிப்பிடத்தக்கது.

Exit mobile version