Tamil News
Home செய்திகள் நெடுந்தீவுப் பகுதியில் கரை ஒதுங்கிய தமிழக மீனவர்களின் படகு

நெடுந்தீவுப் பகுதியில் கரை ஒதுங்கிய தமிழக மீனவர்களின் படகு

தமிழக மீனவர்களது என நம்பப்படும் மீன்பிடி ட்ரோளர் படகு ஒன்று நெடுந்தீவுப் பகுதியில் கரை ஒதுங்கியுள்ளதனால் கடும் விசாரணைகள் இடம் பெறுகின்றன.

இந்தியாவின் மீன்பிடித் துறை 08/ எம்.எம்/145  இலக்கம் பொறிக்கப் பட்ட ட்ரோளர் விசைப் படகு ஒன்று நெடுந்தீவில் கரை ஒதுங்கியுள்ளது. இவ்வாறு கரை ஒதுங்கியப் படகு தொடர்பில் உள்ளூர் மீனவர்கள் கடற் படையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

மீனவர்களின் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற கடற் படையினர், தமிழக மீனவர்களிற்கு சொந்தமானது எனக் கருதப்படும் படகினைக் கைப்பற்றினர்.

இவ்வாறு ஆக்கள் அற்ற நிலையில் படகு, நெடுந்தீவில்  கரை ஒதுங்கியுள்ளதனால்  குறித்த  படகில் சட்டவிரோதமாக  யாராவது ஊடுருவியுள்ளனரா என்பது  தொடர்பில் கடற் படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version