Tamil News
Home செய்திகள் நெடுந்தீவில் 22 இந்திய மீனவர்கள் கைது – எல்லை தாண்டிய போது விசைப்படகுகளும் பறிமுதல்

நெடுந்தீவில் 22 இந்திய மீனவர்கள் கைது – எல்லை தாண்டிய போது விசைப்படகுகளும் பறிமுதல்

நெடுந்தீவு அருகே கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களது 3 விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 22 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version