நுாற்றாண்டுகளுக்குப் பிறகு நினைவு கூரப்படும் அமெரிக்க இனப்படுகொலை

அமெரிக்க வரலாற்றில் மிகமோசமான இன வெறுப்பு சம்பவங்களில் ஒன்றான 1921ஆம் ஆண்டு நடைபெற்ற துல்சா இனப் படுகொலையை முதல் முறையாக  ஜோ பைடன் நினைவு கூர்ந்துள்ளார்.

அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணம் துல்சா பகுதியில், நடந்தப் படுகொலைகள் ஒப்பீட்டளவில் வசதியான ஆபிரிக்க அமெரிக்கர்களைச் சொத்துக்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் நாட்டையும் உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஆபிரிக்க அமெரிக்கர்களின் அதிகமாக வசிக்கக் கூடிய துல்சா பகுதியில், கறுப்பினத்தவர்கள் வால் ஸ்ட்ரீட் அழைக்கப்பட்ட பகுதியில் 1921ஆம் ஆண்டு மே 31 மற்றும் ஜூன் 1ஆம் திகதியில் கறுப்பின மக்களின் மீது திட்டமிட்ட வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

இந்தப் படுகொலைகள் நடைபெற்று நுாற்றாண்டுகள் கடந்த நிலையில், இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “ இது போன்ற சம்பவமே நடைபெறவில்லை என பாசாங்கு செய்வதால் நமக்கு எந்தப் பலனும் இல்லை. எது நல்லது, எது கெட்டது என தெரிந்து வைத்திருக்க வேண்டும். பெரிய நாடுகள் இதைத் தான் செய்கின்றன. அவர்கள் தங்கள் இருண்ட பக்கங்களுடன் உடன்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.