Tamil News
Home செய்திகள் நீதி மன்ற நடவடிக்கைக்காக யாழ் அழைத்துச் செல்லப்பட்ட மணிவண்ணன்

நீதி மன்ற நடவடிக்கைக்காக யாழ் அழைத்துச் செல்லப்பட்ட மணிவண்ணன்

யாழ் மாநகர மேயர் மணிவண்ணனை நீதிமன்றில் முற்படுத்துவதற்காக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் வைத்து இன்று அதிகாலை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட யாழ்மாநகர மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் வவுனியா பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

காலையில் இருந்து மாலை 6.30 மணிவரை விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அவரை நீதிமன்றில் முற்படுத்துவதற்காக மீண்டும் யாழ்ப்பாணம் அழைத்து செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Exit mobile version