Tamil News
Home செய்திகள் நீங்கள் அவர்களை சாகடிக்கலாம்.ஆனால் ஒருபோதும் தோற்கடிக்க முடியாது.

நீங்கள் அவர்களை சாகடிக்கலாம்.ஆனால் ஒருபோதும் தோற்கடிக்க முடியாது.

நீங்கள் அவர்களை சாகடிக்கலாம்.
ஆனால் ஒருபோதும் தோற்கடிக்க முடியாது.
ஏனெனில் அவர்களது போராட்டம் மண்ணுக்கானது.

மண்ணை இழந்தால் இனத்தை இழக்க நேரிடும் என்பதை
அவர்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள்.

அவர்களின் வலி எந்தளவு கொடுமையானது என்பதை
ஒவ்வொரு ஈழத் தமிழனும் அறிவான் – ஏனெனில்
இந்த வலியை அவனும் அனுபவித்தவன் அல்லவா?

அதனால்தான் காஸ்மீர் மக்களுக்கு தனது அதரவை தெரிவிக்கிறான்
சீக்கிய மக்களுக்கு தனது அதரவை தெரிவிக்கிறான்
இப்போது குர்திஸ் மக்களுக்கும் ஆதரவு தெரிவிக்கிறான்.

இனி உலகில் எங்கெல்லாம் மக்கள் அடக்குமுறைக்கு எதிராக போராடுகிறார்களோ
அங்கெல்லாம் அவர்களுக்கு ஆதரவாக தமிழன் குரல் ஒலிக்கும்.

-பாலன் சந்திரன்-

Exit mobile version