நாள் ஒன்றுக்கு 1000 ரூபா செலவழித்து பாடசாலைக்கு வரும் ஆசிரியர்களுக்கும் நிவாரணம் தேவை -இலங்கை ஆசிரியர் சங்கம்

நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாவுக்கு மேல் செலவழித்து பாடசாலைகளுக்குச் செல்லும் ஆசிரியர்களுக்கு சில சலுகைத் திட்டம் தேவை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நேற்று தெரிவித்தார்.

நகரின் ஒதுக்குப் புறத்திலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்கள், ஆசிரியர்கள் வருவதில் கடும் சிரமம் ஏற்படுவதுடன், போக்குவரத்துக்கு மட்டும் அதிகளவில் பணம் செலவழிக்க வேண்டியுள்ளதால் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

இந்நிலைமையின் தீவிரத்தன்மையைப் புரிந்து கொள்வதற்கு மாகாணங்களுக்கு வர வேண்டும் எனவும் நேற்று புத்தளம் மாவட்டத்திற்கு விஜயம் செய்த போது தற்போதுள்ள நிலைமையை நன்கு புரிந்து கொள்ள முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் போக்கு வரத்து சிரமங்கள் காரணமாக பாடசாலைகளை நடத்துவதில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.