நாடாளுமன்றத் தேர்தலில் சுதந்திரக் கட்சி தனி வழி: மைத்திரி ஆலோசனை

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிடுவது குறித்து அந்தக் கட்சியின் தலைவரும்,முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன மந்திர லோசனைகளை நடத்தி வருகிறார்.

முன்னதாக ஜனாதிபதித் தேர்தல் வேளையில் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவுடன் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முறையாக அமுல்படுத்தப்படாமை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவை யில் உரிய இடம் அளிக்கப்படாமை, எதிர்வரும் தேர்தலில் தாமரை மொட்டுச் சின்னத்தில் மட்டுமே போட்டியிட வேண்டுமென்ற பொதுஜன பெரமுனவின் சில உறுப்பினர்களது வலியுறுத்தல் போன்ற விடயங்களால் மைத்திரிபால கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளார் என அறியமுடிந்தது.

இதனால் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டுப்பின்னர் பெரும்பான்மை பெரும்தரப்புக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்குவது குறித்து மைத்திரி இப்போது மந்திரலோசனைகளை நடத்தி வருகிறார் எனத் தெரியவருகின்றது.