தமிழர்களால் நினைவுகொள்ளப்படும் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வுகளை தடுப்பதற்கு படைத்துறை எந்த நடவடியையும் மேற்கொள்ளாது என சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
பெயரில் யுத்த வெற்றி கொண்டாட்டங்கள் இந்த முறையும் ராணுவத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளமையை முன்னிட்டு கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவசரகால சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் , இவ்வாறான நினைவு தின நிகழ்வுகளை நடத்துவது சரியானதா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு பதிலளித்த மகேஷ் சேனாநாயக்க,அவசரகால சட்டமும், நினைவு தின அனுசரிப்பும் இருவேறு விடயங்கள் எனவும் சட்டவிதிகளுக்கு உட்பட்டு, நினைவு தினத்தை அனுசரிப்பதற்கான உரிமை அனைவருக்கும் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.