Tamil News
Home செய்திகள் நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு நடமாடும் CCTV

நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு நடமாடும் CCTV

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கைக்காக பொலிஸ் தலைமையகத்தினால் நடமாடும் CCTV கண்காணிப்புப் பிரிவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 06ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெறும் திருவிழாவில் எதிர்வரும் 16ஆம் திகதிக்குப் பின்னர் சிறப்பு உற்சவங்கள் நடைபெறவிருப்பதால், பெருமளவு மக்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக பொலிஸ் தலைமையகத்தினால் நடமாடும்  CCTV கண்காணிப்பு பிரிவு அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் பிரிவின் இரண்டு வாகனங்கள் இன்று (21.08) நல்லூர் ஆலய சூழலில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளுக்கு வருகை தந்துள்ளன.

Exit mobile version