நல்லூர் – அரசடி முடக்கம் – 22 பேருக்கு கொரோனா தொற்றியதையடுத்து அதிரடி

யாழ்., நல்லூர் அரசடிப் பகுதியை தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்குவதற்கு சுகாதாரத்துறையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நல்லூர் ஜே 103 கிராம அலுவலகர் பிரிவில் ஒரு பகுதியான அரசடியைத் தனிமைப்படுத்துவதற்கு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ். மாவட்ட செயலாளர் ஊடாக கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்தும் செயலணிக்கு யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியால் கோரிக்கை முன்வைக்கட்டுள்ளது.

நல்லூர் அரசடியில் கடந்த ஒரு வாரத்தில் 22 கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதனால் அரசடிப் பகுதியில் வசிக்கும் மக்களைச் சுயதனிமைப்படுத்துவதுடன் அந்தப் பகுதியை முடக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது