நல்லிணக்கத்தை அழித்தவருக்கு நல்லிணக்கத்திற்கான விருது

சிறிலங்கா முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு 2019ஆம் ஆண்டிற்கான பொதுத் தள விருது 9Common ground award0 என்ற விருது வழங்கப்பட்டது.

சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்காக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க முன்னெடுதத பணிகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1995 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரையிலும் சிறீலங்காவின் அரச தலைவராக பதவி வகித்த சந்திரிக்கா, பௌத்த பேரிளவாத சிந்தனைக்கு வழிவிட்டு சிறுபான்மை தமிழ் மக்கள் மீது மிகப்பெரும் இனப்படுகொலையை மேற்கொண்ட சிங்களத் தலைவர்களில் ஒருவர்.

சமானதானத்திற்கான கதவுகளை மூடி போரை முன்னெடுத்த அவர், நவாலி சென் பீற்றேஸ் தேவாயைப் படுகொலை, மடுத் தேவாலையப் படுகொலை என பெருமளவான தமிழ் மக்களை படுகொலை செய்திருந்தார். ஒரு இனப்படுகொலையாளருக்கு வழங்கப்படும் இந்த விருது தமிழ் மக்களின் மனங்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.