Tamil News
Home செய்திகள் தொடர்ந்தும் அதிகரிக்கும் தொற்று – யாழ்ப்பாணத்தில் நேற்று 24 பேருக்கு கொரோனா

தொடர்ந்தும் அதிகரிக்கும் தொற்று – யாழ்ப்பாணத்தில் நேற்று 24 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணத்தில் மேலும் 24 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வு கூடம் இரண்டிலும் 760 பேரின் மாதிரிகள் நேற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது, 26 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இவர்களில் யாழ்ப்பாணத்தில் 24 பேரும் கிளிநொச்சி, முல்லைத்தீவில் தலா ஒருவரும் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டது. யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச்சந்தை மற்றும் கடைத் தொகுதிகளைச் சேர்ந்த 22 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் 14 நாள்களின் பின் நேற்று முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையிலேயே தொற்று கண்டறியப்பட்டது.

கிளிநொச்சி, முல்லைத்தீவில் தலா ஒருவர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றும் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

Exit mobile version