சிறீலங்கா அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த அழுத்தம் கொடுக்க தொடர்ச்சியாக போராட அனைவரும் முன்வர வேண்டும் என அருட்தந்தை சக்திவேல் அழைப்பு விடுத்துள்ளார்
இன்றைய தினம் வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்புப் போராட்டமானது பத்தாவது நாளாக நல்லூரில் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
அந்த வகையில் தென் பகுதியிலிருந்து வந்த அரசியல் கைதிகளுக்காக போராடும் அருட்தந்தை சக்திவேல் மற்றும் அவரோடு இணைந்து சிங்கள அருட்தந்தையர்கள் மற்றும் சிங்கள சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் அனைவரும் மாணவர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதில் கருத்து அருட்தந்தை சக்திவேல்தெரிவிக்கையில், “தமிழ் மக்களுக்கு உள்ளக பொறிமுறையில் உள்ளக விசாரணையில் நம்பிக்கையில்லை ஆகிய காரணத்தினால் சர்வதேச நீதி கோரி நிற்கின்றார்கள். இது நியாயமான கோரிக்கை. இதற்கு வலு சேர்க்க வேண்டியது தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் கடமையும் பொறுப்பும் ஆகும். எனவே இந்த போராட்டத்தை பலமிக்க போராட்டமாக மாற்றி சர்வதேச நாடுகளுக்கு சிறீலங்கா அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த அழுத்தம் கொடுக்க தொடர்ச்சியாக போராட அனைவரும் முன்வர வேண்டும்“ என அழைப்பு விடுத்துள்ளார்