தொடரும் பொருளாதார நெருக்கடி-மேலும் 7 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் உட்பட இலங்கை தமிழர்கள் 7 பேர் அகதிகளாக வெள்ளிக்கிழமை (28) தனுஷ்கோடி மணல் திட்டு பகுதியில் தஞ்சமடைந்துள்ளனர்.

தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே உள்ள 2 ஆவது மணல் திட்டையில் இன்று வெள்ளிக்கிழமை (28 ஆம்  திகதி) காலை குழந்தைகள் உட்பட 7 பேர் தவித்தபடி நின்றதை கடலுக்குச் சென்ற மீனவர்கள் பார்த்தனர். இதுகுறித்து அவர்கள் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து  இலங்கையை சேர்ந்த 7 பேரும் மீட்கப்பட்டனர்.

விசாரணையில், அவர்கள் இலங்கை முல்லைத்தீவு, தீர்த்தக்கரை பகுதியைச் சேர்ந்த ஜோப்ரி மகன் நியூட்டன் வில்லியம் (43), அவரது மனைவி வனிதா (38), மகன்கள் விஷால் (15), டோனி (10), ஜோன் (8), அதே பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவரின் மனைவி ஷாலினி, அவருடைய ஒன்றரை வயது குழந்தை ஆதீஷ் என தெரியவந்தது.

அவர்களின் உரிய விசாரணைக்குப் பின்னர் மண்டபம் முகாமில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.