தொடரும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்படும் மக்கள்

சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

DSC05408 தொடரும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்படும் மக்கள்

கடந்த சிலநாட்களாக வீசிவரும் காற்றுடன் கூடிய மழை காரணமாக வவுனியா வேலங்குளம் கிராமசேவகர் பிரிவுக்குற்பட்ட சின்னத்தம்பனை கிராமத்தில் 06 வீடுகள் சேதமாகியுள்ளதோடு 04 குடும்பங்களைச் சேர்ந்த 15பேர் இடைத்தங்கள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

DSC05414 தொடரும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்படும் மக்கள்

நேற்றுறைய தினம் சின்னத்தம்பனை கிராமத்தில் தற்காலிக வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்த காரணத்தினால் வீடுகளுக்குள் கைக்குழந்தைகளுடன் வாழ்வது அபாயமானது எனக் கருதி வேவலங்குளம் கிராமசேவையாளரின் ஆலோசனைக்கு அமைய குறித்த கிராம மக்கள் தேவாலயம் ஒன்றில் தற்காலிக முகாம் அமைத்து தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

DSC05420 தொடரும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்படும் மக்கள்

இம் மக்களுக்கு தற்போது அவசர உதவியாக சமைத்த உணவுகள் மற்றும் குழந்தைகளுக்கான பால்மா போன்ற அடிப்படை வசதிகள் தேவைப்படுகின்றது. இந்த விடையம் தொடர்பில் சமூக மட்ட அமைப்புகள் இணைந்து நிவாரணப் பணிகளை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் தேவை.