Tamil News
Home செய்திகள் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதானது சுகாதாரத்துறைக்கு பாதகமான நிலை சுமந்திரன் எச்சரிக்கை

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதானது சுகாதாரத்துறைக்கு பாதகமான நிலை சுமந்திரன் எச்சரிக்கை

பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜுன் 20ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேட்பாளர்கள் தமது பிரசார நடவடிக்கையை ஆரம்பிக்கும் போது சுகாதாத்திற்கு பாதகமான நிலையை ஏற்படுத்தும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.கே.சுமந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் அவர் கூறுகையில்,

தேர்தல் நடத்துவதற்கு ஏற்ற சூழ்நிலை இதுவரை ஏற்படவில்லை. ஜுன் 20இல் தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலுக்கான திகதி குறிப்பிடப்பட்டால், வேட்பாளர்கள் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட முற்படுவார்கள். இது சுகாதாரத்திற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். அதனால் தான் தேர்தலுக்கான திகதியை குறிப்பிட வேண்டாம் என நாம் ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடிதம் எழுதியிருந்தோம்.

தேர்தல்கள் ஆணைக்குழு இன்று(21) நடத்தவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்திலும் இதனை நாங்கள் வலியுறுத்தவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

Exit mobile version