தேர்தல் கடமைகளில் 2200 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் 

நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலைக் கண்காணிப்பதற்காக 2200 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இலங்கை வந்துள்ளனர்.

இந்த வகையில், வவுனியாவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் குறித்த தேர்தல் கண்காணிப்பாளர்கள், வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களை சென்று பார்வையிட்டு வருகின்றனர்.