திருச்சி சிறப்பு முகாமில் 10 ஆவது நாளாக தொடரும் போராட்டம்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்திருக்கக் கூடிய சிறப்பு முகாம் என்ற தனிச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழராகிய 78 பேர் தங்களை விடுதலை கோரி  இன்று 10வது நாளாக  கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

WhatsApp Image 2021 06 18 at 2.12.11 PM திருச்சி சிறப்பு முகாமில் 10 ஆவது நாளாக தொடரும் போராட்டம்

இன்றைய அவர்களது   போராட்டத்தில் தமது கருத்துக்களை, தங்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்தும் முகமாக  சிறப்பு முகமா…? அல்லது சிறையா..? என்ற பார்வையை உண்மைத்தன்மையை அரசுக்கும் மக்களுக்கும் வெளிப்படுத்தும் ஒரு நூதன போராட்டமாக  போராடிக்கொண்டு இருக்கின்றனர்.