Tamil News
Home செய்திகள் திருகோணமலையில் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரான தமிழர்களின் பூர்வீகம்

திருகோணமலையில் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரான தமிழர்களின் பூர்வீகம்

திருகோணமலையில் தமிழர்களின் பூர்வீக பிரதேசமான மூதூரில் இரண்டாயிரம் வருடங்களின் முன்னர் எம் மூதாதையர்கள் இரும்பை உருக்கிப் பாவித்தார்கள் என்பதற்கான ஆதாரங்களை தொல்பொருள் திணைக்களத்தினர் கண்டறிந்துள்ளனர். மூதூரின் தங்கநகர் பகுதியில் இதற்கான தடயங்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஆதி மனிதர்களின் இரும்புப் பாவனை தொடர்பாக கிழக்கில் கண்டறியப்பட்ட தொன்மையான சான்று இதுவாகும். கரடுமுரடான குறித்த பகுதியில் நிலத்தின் கீழ் புதையுண்ட நிலையில் இரும்புப் பொருட்களும், தீக்குழிகளும் அங்கு கண்டறியப்பட்டுள்ளன.

Exit mobile version