திடீரென மயங்கி விழுந்த 41 மாணவர்கள்!

உணவு விஷமடைந்ததன் காரணமாக, 41 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

ஹட்டன் கல்வி வலயத்தின் கினிகத்தேன- களுகல சிங்கள வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களாவர்.

இவர்கள் அனைவரும் கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.erger திடீரென மயங்கி விழுந்த 41 மாணவர்கள்!

erterte 1 திடீரென மயங்கி விழுந்த 41 மாணவர்கள்!

காலை உணவை உட்கொண்ட பின்னர் மாணவர்களுக்கு மயக்கம், வாந்தி ஏற்பட்டதாகவும் இதனால் 11 மாணவிகள் உள்ளடங்கலாக 41 மாணவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.

பாடசாலையில் நடை​பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில், மாணவர்களுக்கு மாலு பணிஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனை உட்கொண்ட மாணவர்களே பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.