Tamil News
Home செய்திகள் தலைவர் பிறந்த நாளை கொண்டாடியவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

தலைவர் பிறந்த நாளை கொண்டாடியவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரனின் பிறந்த  நாளைக் கொண்டாடியவர்களை விளக்கமறியலில் வைக்க நீதி மன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளைக் கொண்டாடுதல், மாவீரர் நாளை அனுஷ்டித்தல் தொடர்பான தகல்வல்களை பேஸ்புக்கில் வெளியிட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்களும் 14 விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் பொலிஸாரால் கடந்த 26ஆம் திகதி மாலை கைது செய்யப்படட சந்தேக நபர்கள், நீதிமன்ற அனுமதியின் கீழ், ஏறாவூர்ப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்த நிலையில், நீதிவான் நீதிமன்ற பதில் நீதவான் வினோபா இந்திரன் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர்.

இவ் வேளையிலேயே, சந்தேகநபர்களை டிசெம்பர் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள் நான்கு பேரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

தீவிரவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேற்படி சந்தேகநபர்கள், சித்தாண்டி, வந்தாறுமூலை, கொம்மாதுறை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

Exit mobile version