தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்கள் பள்ளிவாசல் மையவாடியில் புதைக்கப்பட்டது

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதியான நசார் முகமட் ஆசாத்தின் உடற்பாகங்கள் இன்று வெள்ளிக்கிழமை(27) புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் பலத்த பாதுகாப்பிற்குமத்தியில் புதைக்கப்பட்டது.

குறித்த தற்கொலை குண்டுதாரியின் தலை மற்றும் உடற்பாகங்கள் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலை பிரேத அறையில்; வைக்கப்பட்டிருந்தது இந்த உடற்பாகங்களை அரசசெலவில் புதைக்குமாறு அரசாங்க அதிபருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம்கட்டளையிட்டது இதனையடுத்து இதனை மட்டக்களப்பு புதூர் ஆலையடிச்சோலை மயானத்தில் புதைப்பதற்கு முயற்சித்தபோது அங்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்

அதனையடுத்து பல்வேறு இடங்களில்புதைக்கப்படவுள்ளதாக அந்தந்த பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் சில ஊள்ளுராட்சிமன்றங்கள் மாநகரசபைகள் இதனை தமது பிரதேசத்தில் புதைப்பதற்கு எதிராக தீர்மானங்களையும் எடுத்திருந்தனர்.இந்த நிலையில் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் கடந்தமாதம் 26ம் திகதி இரவேடு இரவாக இந்த உடற்பாகங்கள் புதைக்கப்பட்டது.

Ashad 2 தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்கள் பள்ளிவாசல் மையவாடியில் புதைக்கப்பட்டதுஇதனையடுத்துபொதுமக்கள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் மற்றும் அரசில் வாதிகள் இதற்குஎதிராக வீதியில் இறங்கி போராடியதுடன் கல்லடி பாலத்தில் வீதியைமறித்து போராடடம் நடாத்தினர்.கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட உடற்பாகங்களை நீதிமன்றஉத்தரவுக்கமைய மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு வைத்திய சாலை பிரேத அறையில் வைக்கப்பட்டநிலையில் நேற்று வியாழக்கிழமைக்கு முன்னர் இதனை பொருத்தமான இடத்தில் அரசாற்க அதிபர்ஊடாக புதைக்குதாறு நீதவான் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கட்டளையிட்டார்.

Ashad 4 தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்கள் பள்ளிவாசல் மையவாடியில் புதைக்கப்பட்டதுஇதற்கமைய குறித்த உடற்பாகங்களை இன்று வெள்ளிக்கிழமை (27) புதிய காத்தான்குடி 3ம் குறிச்சியிலுள்ள பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் புதைப்பதற்கு தீர்மானிக்கப்டதையடுத்துவைத்தியசாலை பிரேத அறையில் இருந்த உடற்பாகங்களை காத்தான்குடி பிரதேச செயலாளர் மற்றும்கிராம உத்தியோகத்தர் பெறுப்பேற்று பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பலத்த பாதுகாப்புடன்குறித்த மையவாடியில் புதைக்கப்பட்டது இதனை புதைக்கும் போது இஸ்லாமிய மார்க்க கடமைகள் எதுவும் இடம் பெறவில்லை.

இதன் போது பெருமளவிளான பொலிசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.