தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

யாழ். மாவட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் சி.வி.விக்னேஸ்வரன், கந்தையா அருந்தவபாலன், சிற்பரன் தவச்செல்வம், கந்தையா ரத்னகுமார் மற்றும் மீரா அருளானந்தம் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பில், ஆறுமுகம் கந்தையா பிரேமச்சந்திரன் மற்றும் சிங்கபாகு சிவகுமார் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் தமிழ்த் தேசிய கட்சி சார்பில் நல்லதம்பி ஸ்ரீகாந்தா மற்றும் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் ஆகியோரும் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் சார்பில் அதன் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் ஆகியோரும் போட்டியிடவுள்ளனர்.