யாழில் தமிழையும், சிங்களத்தையும் புறந்தள்ளிய சீன மொழி

சாவகச்சேரியில்  ‘China State Construction Engineering Corporation’  என்ற சீனாவின் அரச  நிறுவனத்தில் சீன மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் பெயரிடப்பட்டுள்ளது.

அலுவலக பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள கட்டிடம் முழுமையாக இரு மொழிகளிலும்  எழுதியுள்ளதோடு தனியான  பெயர் பலகைய்யும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் அரச  கரும மொழிகளான சிங்களமும், தமிழும் முழுமையாக புறக்கணிக்கப்பட்டு பெயரிடப்பட்டுள்ளது.

காத்தான்குடியில் அரபி மொழியில் எழுதப்பட்டுள்ளதை புத்த பிக்குகளும் ஆளும் கட்சியும் அரபி என்ன இலங்கையின் ஆட்சி மொழியா என்று கேட்டு போராடியவர்கள், இன்று சீன மொழி இலங்கையில் எங்கும் பயன்படுத்தப்படுவதை கேள்விக்கு உட்படுத்தவில்லை.

image0 1 யாழில் தமிழையும், சிங்களத்தையும் புறந்தள்ளிய சீன மொழி
சீன தூதர் சட்டமா அதிபர் மாளிகையில் வைத்த கல்வெட்டில் சீன மொழி இருந்ததற்கு தாங்கள் பரிசாக வழங்கிய இடம் அதனால் சீன மொழியை பயன்படுத்தினோம் என்று சால்ஜாப்பு கூறியிருந்தார்.  வடக்கு கிழக்கில் தமிழ் மொழி பிரதான மொழி என்று இருக்கும் பட்சத்தில், தமிழும் சிங்களமும் இல்லாது தனியே சீனமொழி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், 15ம் நூற்றாண்டில் சீனா இலங்கையை ஆக்கிரமித்து சிங்கள மன்னனை சிறை பிடித்து சீனாவிற்கு கொண்டு சென்ற நிலை 21ம் நூற்றாண்டிலும் நடக்குமா எனக் கேள்வி எழுப்பப்படுகின்றது.