தமிழில் தேசியகீதம் பாட சிறீலங்கா மறுப்பு – அசோசியட் பிரஸ்

இன்று (04) இடம்பெற்ற சுதந்திரதின விழாவில் தமிழில் தேசியகீதம் பாடுவதை சிறீலங்கா அரசு புறக்கணித்துள்ளதாக அசோசியட் பிராஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறீலங்காவின் இரண்டாவது தேசிய மொழியான தமிழ் மொழியில் தேசியகீதம் பாடுவதை சிறீலங்கா அரசு புறக்கணித்துள்ளது. முன்னைய அரசு இரு மொழிகளிலும் தேசியகீதம் பாடப்படுவதை அனுமதித்திருந்தது.

கடந்த வருடம் புதிய அரச தலைவராக தெரிவுசெய்யப்பட்ட கோத்தபாயா ராஜபக்சா தான் எல்லா இன மக்களுக்கும் தலைவர் என தெரிவித்திருந்தார். ஆனால் பெரும்பாலான தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை.

2009 ஆம் ஆண்டு நிறைவடைந்த போரை அவரே வழிநடத்தியவர். இந்த போரில் பெருமளவான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தன. பெருமளவான தமிழ் மக்கள் கொல்லப்பட்டும் காணாமலாக்கப்பட்டும் இருந்தனர்.

தமிழ் மொழியில் தேசியகீதம் பாடப்பட வேண்டும் என பல தமிழ் அரசியல் கட்சிகள் விடுத்த கோரிக்கையும் புறக்கணிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.