தமிழர் போராட்டத்தை, ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலை போராட்டமாக அங்கீகரித்து ஆதரவளித்தவர், தோழர் பாண்டியன் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தா.பாண்டியன் மறைவுக்கு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக (89) தா.பாண்டியன் மருத்துவமனையில் இன்று காலமானார்.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சிகப்பு நட்சத்திரம் உதிர்ந்ததே..!
இந்திய தமிழ் மாநில, தேசிய அரசியல் பரப்பின், நடப்பு சமூக ஜனநாயக அமைப்புக்கு (சிஸ்டம்) உள்ளே, நான் மதிக்கும் அரசியல் தலைவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா. பாண்டியன்.
விசேடமாக, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, பேரினவாத கட்சிகளுடனான அரசியல் கூட்டுக்கு விலையாக, தமிழ் இலங்கையர் போராட்டத்தை பயங்கரவாதமாக வர்ணித்தது.
இலங்கை கம்யூனிஸ்ட்களின் இந்த வறட்டுவாதத்தை ஏற்கும் மனநிலையில் இந்திய கம்யூனிஸ்டுகள் ஆரம்பத்தில் இருந்தார்கள்.
இதை நிராகரித்து, தமிழர் போராட்டத்தை, ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலை போராட்டமாக அங்கீகரித்து ஆதரவளித்தவர், தோழர் பாண்டியன்..!“ எனத் தெரிவித்துள்ளார்.