மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக தமிழர் நிலங்களை அபகரித்து மேற்கொள்ளப்படும் இல்மனைற் அகழ்விற்கு எதிராக வாகரையில் மக்கள் போராட்ட நடத்தி பிரதேச செயலகத்தையும் முற்றுகையிட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் மாணவர்கள் அப்பிரதேச மக்களோடு தமிழ்தேசிய மக்கள் முன்னணியினரும், அதன் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரனும் கலந்துகொண்டார்.