சர்வதேச இந்து கூட்டமைப்பின் ஏற்பாட்டில் சைவத்திருக்கோவில் அறங்காவலர் கருத்தரங்கு மாநாடு வவுனியாவில் இடம்பெற்றது.
சைவத்திருக்கோவில்களின் சமூகப்பணிகள் எனும் தலைப்பில் வன்னி மாவட்டங்களை சேர்ந்த சைவத்திருக்கோவில்களின் அறங்காவலர்களிற்கான கருத்தரங்கு இன்று காலை 9மணியளவில் வவுனியா மில்வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்றது.
இதன்போது தமிழர் தாயகப் பிரதேசங்களில் சைவசமய தற்போதைய சூழலில் சைவசமயம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் மற்றும் அவற்றை கையாள்வதற்கு திருக்கோயில்களின் அறங்காவலர்கள் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டிருந்தது.
நிகழ்வில் இந்தியா,கனடா மற்றும்,மலேசியா, நோர்வே போன்ற நாடுகளில் இருந்து வருகைதந்த துறை சார்ந்தவர்களால் கருத்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தது.