Tamil News
Home செய்திகள் தமிழர் தலைநகரில் புத்தருக்கு சிலை

தமிழர் தலைநகரில் புத்தருக்கு சிலை

திருகோணமலை தெவனிபியவர விகாரைக்கு சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜுலை மாதம் 07ஆம் திகதி விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இங்குள்ள ஸ்ரீ இந்திராராம விகாரையில் 25அடி உயரமான புத்தர் சிலையொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தர் சிலையை திறந்து வைப்பதற்காகவே மைத்திரிபால சிறிசேன அங்கு செல்கின்றார்.

மொரவெவ பிரதேச சபையின் தவிசாளரும் இந்திராராம விகாரையின் விகாராதிபதியுமான பொல்ஹேன்கொட உபரத்ன ஹிமியின் அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி அங்கு செல்லவுள்ளார்.

கடந்த சில காலங்களாக தமிழர் பிரதேசங்களில் ஜனாதிபதி விஜயம் செய்யும் போது, ஒவ்வொரு புத்தர் சிலையையோ, அல்லது சிங்களவர்களுக்கு சாதகமான குடியிருப்பையோ, அல்லது ஏதாவது ஒரு அபிவிருத்தியையோ மேற்கொள்வது வழமையானதொன்றாகி விட்டது. இது எதிர்வரும் காலங்களில் இந்தப் பிரதேசங்களில் சிங்களவர்களும் குடியிருந்தார்கள் என்பதை உறுதிப்படுத்தும் ஒரு செயலின் நோக்கமாகவும் இருக்கலாம்.

Exit mobile version