Tamil News
Home செய்திகள் தமிழர்கள் பயணித்த பஸ்கள் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல்

தமிழர்கள் பயணித்த பஸ்கள் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இரு பஸ்கள் இனந்தெரியாதோரால் நேற்று (28) இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அனுராதபுரம் நொச்சியாகம பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட புத்தளம் – கொழும்பு வீதியில் கொழும்பிலிருந்து வடக்கு நோக்கி இன்று இரவு பயணித்த தனியார் மற்றும் அரச பஸ்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் கற்களை வீசி இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

வடக்கிலிருந்து கொழும்பில் நடைபெற்ற சிக்கனக் கடன் கூட்டுறவுச் சங்கங்களின் தேசிய மாநாட்டில் பங்குபற்றிவிட்டு திரும்பிய வவுனியாவை சேர்ந்த தனியார் பஸ் மற்றும் யாழ் நோக்கி பயணித்த இலங்கை அரச போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றுமே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

Exit mobile version