Tamil News
Home செய்திகள் தமிழக மீனவர்கள் பலர் இலங்கை கடற்படையால் கைது

தமிழக மீனவர்கள் பலர் இலங்கை கடற்படையால் கைது

தமிழக மீனவர்கள் 7 பேரை, எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் இலங்கை கடற்படை கைதுசெய்துள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்த ஒரு படகும் அதில் இருந்த 7 மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

இன்று ஒரே நாளில் 5 படகுகள், 36 மீனவர்கள் இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 14ம் திகதி இராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்குச் சென்றிருந்த மீனவர்கள் 29 பேரை அவர்களின் 4 விசைப்படகுகளுடன் தமது கடல் எல்லைக்குள் அத்து மீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படை கைது செய்திருந்தது.

இந்நிலையில், இவ்வாறு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவர்களின் உறவினர்களும் இராமேஸ்வர விசைப்படகு மீனவர்களும் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version