Tamil News
Home உலகச் செய்திகள் தமிழகத்திற்கு மஞ்சல் எச்சரிக்கை -சென்னையில் கனமழை!

தமிழகத்திற்கு மஞ்சல் எச்சரிக்கை -சென்னையில் கனமழை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், கனமழைக்கான மஞ்சள்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் இந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்,  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே நேரம் சென்னையில் அடுத்த 2 முதல் 3 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில்  மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் நள்ளிரவு முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், தங்களது வாகனத்தை இயக்க முடியாமல் கடும்  செருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

Exit mobile version