தமிழ் மக்களின் உரிமைக்கான பாதையை நோக்கி செல்லும் தமிழரசுக் கட்சியை சிலர் தங்களின் சுயலாப அரசியலுக்காக சிதைக்க முற்படுவது கவலையளிக்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கிளிநொச்சியில் நடந்த ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
அவா் இது தொடா்பில் மேலும் தெரிவிக்கையில், “கட்சியின் நிலையில் மனம் பாதித்த நிலையில் நாம் இருக்கின்றோம். சுயநலத்துடன் சேர்ந்த சூழ்ச்சிகரமான சில செயற்பாடுகள் நடைபெறுகின்றன. என்னை நேரடியாக தாக்காது விட்டாலும்
வேறு சிலரைக்கொண்டு தாக்க முற்படுகின்றனர்.
வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் முக்கிய கட்சியாகிய தமிழரசுக் கட்சி தன் நிலையை இழந்து எந்த நீதிமன்றத்திற்கு எதிராக வாதாடினோமோ அந்த நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்பார்க்க வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.