தப்பிச்செல்லும் முயற்சியில் கைதியொருவர் உயிரிழப்பு

மஹர சிறைச்சாலையில் தப்பிச் செல்ல முயற்சித்த கைதியொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

38 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, தப்பிச்செல்ல முயற்சித்த ஆறு கைதிகள் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

நேற்று இரவு 7 கைதிகள் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாகவும் அதில் மதில் மேல் ஏறிய கைதி தவறி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்