Home செய்திகள் தடைகளை தகர்த்து ஆரம்பமாகியது பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை மாபெரும் பேரணி

தடைகளை தகர்த்து ஆரம்பமாகியது பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை மாபெரும் பேரணி

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்டம் இன்று (புதன்கிழமை) முதல் எதிர்வரும் 6ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

144582808 3552846074764193 8262755123601124472 o தடைகளை தகர்த்து ஆரம்பமாகியது பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை மாபெரும் பேரணி

சிவில் அமைப்பினரின் ஏற்பாட்டில் இந்த தொடர் போராட்டம் இடம்பெறவுள்ளதுடன், இந்த தொடர் போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது ஆதரவினை அண்மையில் வழங்கியிருந்தது.

சிறுபான்மையினரின் நில அபகரிப்பு, அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவது, மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை முன்னிறுத்தி இந்த பேரணி  ஆரம்பமாகவுள்ளது.

காவல்துறையினர் வீதி தடைகள் போட்டு துப்பாக்கி முனையில் மிரட்டி அடக்க நினைத்த போதிலும் பேரணி தொடர்கிறது .

வாகன இலக்கங்கள் காவல்துறையினரால் பதிய படுகின்றது .

இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், கலையரசன், இரா.சாணக்கியன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

Exit mobile version