Home செய்திகள் தடைகளுக்கு மத்தியில் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பம்

தடைகளுக்கு மத்தியில் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பம்

தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Image 2020 09 25 at 8.57.47 PM தடைகளுக்கு மத்தியில் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பம்

சாவகச்சேரி சிவன் ஆலயத்தில் இந்தப் போராட்டம் இன்று காலை ஆரம்பமானது.

தியாக தீபம் திலீபனின் நினைவு தினமான இன்று சனிக்கிழமை தமிழ்க் கட்சிகள் ஏற்கனவே திட்டமிட்டதைப் போல காலை முதல் மாலை வரையில் உண்ணாவிரதப் போராட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் என யாழ். நகரில் நேற்று மாலை கூடிய தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

நீதிமன்றத் தடை உத்தரவை மீறாத வகையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என  தமிழ்க் கட்சி ஒன்றின் பிரமுகர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version